பாபநாசம், ஜூன் 12: பாபநாசத்தில் உலக திருக்குறள் மைய கூட்டம் நடந்தது. மனோகரன் தலைமை வகித்தார். அன்பழகன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஜெயராமன் வரவேற்றார். கூட்டத்தில் திருக்குறளின் மேன்மை குறித்து சிறப்புரையாறப்பட்டது. பொன்னுசாமி, கலைச்செல்வன், பெரியசாமி, ஆறுமுகம், சித்ரா, அரிய அரசபூபதி, முத்து, சிவராமன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குருசாமி நன்றி கூறினார்.